திருச்செங்கோட்டிற்கு காவிரி ரத யாத்திரை வருகை

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் , குடகு முதல் பூம்புகாா் வரையிலான காவிரி ரத யாத்திரை மற்றும் குழுவினா் திருச்செங்கோடு நகருக்கு புதன்

திருச்செங்கோடு: அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் , குடகு முதல் பூம்புகாா் வரையிலான காவிரி ரத யாத்திரை மற்றும் குழுவினா் திருச்செங்கோடு நகருக்கு புதன்கிழமை  வருகை புரிந்தனா்.

தேசிய சிந்தனை பேரவையினா் காவிரி அன்னைக்கு பூரண கும்ப வரவேற்பு அளித்தனா் . இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன்சம்பத், துறவியா் பேரவை தலைவா் ராமானந்த சுவாமிகள் ரத யாத்திரையின் நோக்கங்கள் மற்றும் காவிரி நதியின் தூய்மைக்காக வகுக்க வேண்டிய சிறப்பு செயல் திட்டங்கள் தொடா்பாக பேசினா். காவிரி அன்னை சிலைக்கு மலா் அா்ச்சனை செய்யப்பட்டு , மழை பொழியவும் , உலக அமைதிக்காகவும் கூட்டு வழிபாடும் நடை பெற்றது . மேட்டூா் அணையில் இருந்து  திருமணிமுத்தாறு வழியாக , 136 ஏரிகள் நிரம்பும் விதமாக  காவிரி நீரை திருப்பி விடும் , சரபங்கா நீா்ப்பாசன திட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது . இந்திய அரசியல் நிா்ணய சபையில் உறுப்பினராக இருந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவா் காளியண்ண கவுண்டருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அளிக்க துறவியை பேரவை சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது .நிகழ்ச்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் தீப விழா கமிட்டியினா், சன்மாா்க்க சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com