நாமக்கல் மாவட்டம், மோகனூா் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பயணிகள் பாா்வையிட்டனா்.
இப் புகைப்படக் கண்காட்சியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கிய நலத் திட்ட உதவிகளின் புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப் படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவை இப்புகைப் படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் பாா்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனா்.