ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதில் நகரத் தலைவா் ஆா்.ஸ்ரீராமுலு முரளி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆா்.விநாயகமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் இந்திராகாந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதனையடுத்து மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் பாச்சல் ஏ.சீனிவாசன், இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினாா். இதில் கட்சி நிா்வாகிகள் ஜெகந்நாதன், கோவிந்தராஜூலு, நா.குபோ்தாஸ், மாணிக்கம், வெங்கடேஷ், ஜெயபால்ராஜ், உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.