ராசிபுரம் அருகேயுள்ள கார்கூடல்பட்டி ஒன்றியம், ஒன்பதாம் பாலிக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ மங்கள விநாயகர், பரிவார சுவாமிகள் கோயில் திருக்குடமுழுக்கு பெரும் சாந்திப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், புண்யாகவாஜனம், தீபாராதனை, விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, திக் பூஜை, யாகசாலை பூஜை, மகாசங்கல்பம் கடஸ்தாபனம், சுவாமி பிரதிஷ்டை ஹோமம், மகாசங்கல்பம், சூரிய நாராயண பூஜை, கோபூஜை, மகாதீபாராதனை போன்றவை நடைபெற்றன. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கொல்லிமலை ருத்ரகாளிபீடம் தலைமையில் அகோரி மணி வழிகாட்டுதலுடன் பிரம்ம ஸ்ரீ கொ.ஜெ.ம. ஜெட கோபால ஆச்சாரியர், தம்மம்பட்டி சிவாலய அனந்தபத்மநாபன், மதுராந்தகம் அஹோபிலமடம் சம்ஸ்கிருத பேராசிரியர் சங்கர சாஸ்திரிகள் சொற்பொழிவும் வேத மந்திரங்கள் முழுங்க குடமுழுக்கு விழாவும் நடைபெற்றன.