நாமக்கல் மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க உத்தரவிடக் கோரி, ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தி.ரமேஷ் அளித்த மனு: நாமக்கல் மாவட்ட எல்லைக்குள் இருக்கும் அனைத்து வணிக நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் மாற்று மொழியில் இல்லாமல் தமிழிலேயே எழுதப்பட வேண்டும். பிற மொழிகளால் பாமர மக்கள் தடுமாறும் நிலை உள்ளது.
எனவே, எவ்வித கலப்பின மொழியும் இல்லாமல் தூய்மையான தமிழில் பெயர்ப் பலகைகள் அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.