நாமக்கல் கிழக்கு மாவட்ட வெண்ணந்தூர் பேரூர் விடுதலை கட்சி சார்பில் மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை கண்டித்து திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கட்சியின் பேரூர் செயலர் க.நடராஜன் தலைமை வகித்தார். மா.மணிவண்ணன் வரவேற்றார். ஒன்றிய பொறுப்பாளர்கள் க.முல்லைவளவன், பழ.செங்கோட்டுவேல், ஆ.கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் பெரியார், அம்பேத்கர் படத்தை திறந்து வைத்துப் பேசினார். மாவட்ட பொருளாளர் வ.அரசன், ஆ.நீலவானத்து நிலவன், மாநில துணைப் பொது செயலர் வெ.கனியமுதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் பேசினார்.