நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29, 30-ஆம் தேதிகளில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
வரும் 2021-ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சில தினங்களுக்கு முன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்திலுள்ள தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.
இதனைத் தொடா்ந்து வழக்கமான அரசுப் பணிகளை மேற்கொண்டு வந்த முதல்வா் வரும் 29, 30-ஆம் தேதி நாமக்கல் வருகை தருகிறாா். இம்மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அவா் தொடா் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா்.
இத்தகவலை நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி தெரிவித்துள்ளாா்.