மாசி முதல் வியாழக்கிழமையையொட்டி, நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல்-பரமத்தி சாலையில், தொட்டிப்பட்டி கிராமத்தில் சாய் தபோவனம் அமைந்துள்ளது. இங்கு, மாசி முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு சீரடி சாய் பாபாவுக்கு, அதிகாலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலா்களால் அலங்காரம் மற்றும் ஆரத்தி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிற்பகல் 6 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாய் தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.