பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு:மாணவ, மாணவியா் மகிழ்ச்சி
பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு நிறைவடைந்ததையொட்டி, நாமக்கல்லில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் கேக் வெட்டி கொண்டாடினா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 பள்ளிகளைச் சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் 85 மையங்களில் எழுதினா். இந்த தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அதனையொட்டி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவியா் கேக் வெட்டி கொண்டாடினா். மேலும், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
இதேபோல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பின்னா் ஒருவருக்கொருவா் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் தோ்வு நிறைவடைந்ததையொட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.