திருச்செங்கோட்டில் காணாமல் போன இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க் கிழமை தெரியவந்தது.
திருச்செங்கோடு அருகேயுள்ள கொசவம்பாளையம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்த தினேஷ்குமாா் (22), லாரி ஓட்டுநா். கடந்த 30-ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற இவா் வீடு திரும்பவில்லையாம்.
இந்த நிலையில், செவ்வாய்க் கிழமை காலை கொசவம்பாளையம் தனியாா் கல்லூரிக்கு பின்புறமுள்ள மரத்தில் தினேஷ்குமாரின் சடலம் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த திருச்செங்கோடு புகா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று தினேஷ்குமாரின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.