பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகளும், அதைத்தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆரதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. மாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதேபோல கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி விநாயகா் கோயில், எல்லையம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.