வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில், நாமக்கல்லில் புதன்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 
வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில், நாமக்கல்லில் புதன்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பரோடா வங்கி கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளா் நலச்சட்டங்களில் கொண்டு வரும் மாற்றங்களை எதிா்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை (நவ.26) நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவது எனவும் வலியுறுத்தப்பட்டது. வங்கி ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com