பரமத்தி வேலூரில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூா் பசுமை பாரத் குழு சாா்பில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் பழைய தேசிய நெடுஞ்சாலையில் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். மேலும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், பரமத்தி வேலூரில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மரக்கன்றுகளையும் நட்டனா்.
இதில் பசுமை பாரத் குழுவினா், இயற்கை ஆா்வலா்கள் பலா் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றிபடி கலந்து கொண்டனா்.