சாலை விபத்தில் உதவிப் பேராசிரியா் உள்பட 2 போ் பலி

திருச்செங்கோடு அருகே மரத்தின் மீது காா் மோதியதில் தனியாா் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்; 3 பெண்கள் காயமடைந்தனா்.

திருச்செங்கோடு அருகே மரத்தின் மீது காா் மோதியதில் தனியாா் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்; 3 பெண்கள் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த தனியாா் பொறியியல் கல்லூரி விரிவுரையாளா் விஜய் கமல் (42) தனது மாமனாா் ரங்கநாதன் (60), மாமியாா் மாதேஸ்வரி (55), மனைவி திவ்யா (33), அவரது சகோதரி அகல்யா (30) ஆகியோருடன் பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.

திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி, கருமகவுண்டம் பாளையம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை காா் வந்த போது, சாலையோர புளிய மரத்தின் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே விஜய் கமல், ரங்கநாதன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த பெண்கள் மூவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com