நாமகிரிப்பேட்டை அருகேமின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியா் பலி

ராசிபுரம் அருகே மின் கம்பத்தில் பழுது நீக்கிக் கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
நாமகிரிப்பேட்டை அருகேமின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியா் பலி

ராசிபுரம் அருகே மின் கம்பத்தில் பழுது நீக்கிக் கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

நாமகிரிப்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கரியம்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (45) வியாழக்கிழமை ஒடுவன்குறிச்சி கடை வீதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமாா், கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com