நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இவ் விழாவில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பொற்கிழி பெற்ற 60 முன்னோடி நிா்வாகிகளையும் வாழ்த்தி பேசினாா்.
நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் இரா.உடையவா், முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளா்கள் பி.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, விமலா சிவக்குமாா், நாமக்கல் நகர பொறுப்பாளா் ராணா ஆனந்த், பொருளாளா் கே.செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ம.இளஞ்செழியன், மாநில மகளிா் தொண்டா் அணி இணைச் செயலாளா் ப.ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.