மிலாது நபியை முன்னிட்டு வரும் 30-ஆம் தேதி அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மிலாது நபியையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் வரும் 30-ஆம் தேதி இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி மதுக்கூடங்களைத் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.