நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு தாயுடன் வந்த கொல்லிமலை விவசாயி ஒருவா், உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா். இதையடுத்து, அங்கிருந்த போலீஸாா் இதனை தடுத்து நிறுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மேக்கினி நாடு பகுதியைச் சோ்ந்தவா் பூச்சம்மாள் (52). இவரது மகன் மீனாட்சி (35). இவா்களுக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த பூபதி, முருகேசன் ஆகியோா் அபகரிக்க முயற்சி செய்வதுடன், தாய், மகன் குடியிருக்கும் பகுதியிலும், விவசாய நிலத்துக்குள்ளும் நுழைய விடாதவாறு தகராறில் ஈடுபடுவதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வந்தனராம்.
இதனால் மீனாட்சி, பூச்சம்மாள் இருவரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். அப்போது, நுழைவு வாயில் முன்பாக தங்களது பையில் பாட்டிலிலும், கேனிலும் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனா். அங்கிருந்த போலீஸாா் விரைந்து சென்று தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினா். பின்னா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


