ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

டிம் டேவிட் மற்றும் ஹார்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது குறித்து...

News image

ஹார்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் - படம்| AP

Updated On :13 ஏப்ரல் 2026, 2:33 pm

டிம் டேவிட் மற்றும் ஹார்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் திங்கள்கிழமை (ஏப்.13) அபராதம் விதித்துள்ளது.

போட்டி நடத்தை விதிகளை மீறியதாக டிம் டேவிட்டுக்கும், ஓவர்களை சரியான நேரத்துக்குள் முடிக்காமல் தாமதப்படுத்தியதாக ஹார்திக் பாண்டியாவுக்கும் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

டிம் டேவிட்டுக்கு அபராதம் விதித்த காரணம்

ஆர்சிபி பேட்டிங்கின்போது, இன்னிங்ஸின் 18வது ஓவரில் நடுவர்கள் பந்தைப் பார்க்க விரும்பினர். நடுவர் பலமுறை பந்தைக் கேட்டபோதிலும் டிம் டேவிட் அதை ஒப்படைக்கவில்லை.

எனவே, இந்தப் போட்டியின்போது நடுவரின் அறிவுறுத்தலை மீறியதற்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் (Demerit point) விதிக்கப்பட்டது என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த காரணம்

உண்மையில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் பலமுறை ஆட்டத்தை இடைநிறுத்தினர். முதல் இன்னிங்ஸ் இரண்டு மணி நேரம் ஒரு நிமிடத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டு மணி நேரம் நான்கு நிமிடங்களில் நிறைவடைந்தது.

ஆகையால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓவர்களை சரியான நேரத்துக்குள் முடிக்காமல் தாமதப்படுத்தியதாக ரூ.12 லட்சம் அபராதம் விதித்ததாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The IPL administration imposed fines on Tim David and Hardik Pandya on Monday (April 13).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.