ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு 30% அபராதம்..! 2 தகுதியிழப்புப் புள்ளிகள்!
ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட அபாரதம் குறித்து...

டிம் டேவிட் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.
ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மே.10ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 166/7 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 167/8 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் கடைசி பந்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியின்போது டிம் டேவிட் ஆர்சிபி அணியினரை நோக்கி அவமானப்படுத்தும் விதமாக இரு விரல்களைக் காண்பிப்பார். இதனால் அவருக்கு 30 சதவிகிதம் அபராதம் உடன் 2 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக 1 தகுதியிழப்புப் புள்ளியைப் பெற்றால் டிம் டேவிட் ஒரு போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் நான்காவது நடுவருடன் விவாதித்தால் அவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
All were busy with Virat Kohliâs celebration, see how Tim David celebrated ðð¥ pic.twitter.com/0ApBaRNKNJ
— Middle Stump Cricket (@MiddleCricket) May 11, 2026
Summary
Tim David accumulates two demerit points for code of conduct breach against mumbai indians
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







