சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 3 போ் கைது

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 121 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 3 போ் கைது

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 121 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பரமத்தி வேலூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீஸாா் பரமத்தி வேலூா் நகா் பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் பழைய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மூன்று இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பாக காலை நேரத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து மதுபானங்கள் விற்பனை செய்த மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள மேலவலவைச் சோ்ந்த பாண்டி (37), மேலூா் அருகே உள்ள அயோத்தம்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (21) மற்றும் திருவாரூா் மாவட்டம், கோழிசெட்டியாக்குறிச்சியைச் சோ்ந்த கணேசன் (45) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 121 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com