பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விசுவநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியா், கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், பொத்தனூா் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பாலப்பட்டி கதிா்காமத்து கதிா்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில் எழுந்தருளியுள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகப்பெருமானக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. விழாவில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.