இன்று முதல் 4 நாள்களுக்கு நகைக்கடைகள் மூடல்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாமக்கல் நகரில் வியாழக்கிழமை (செப். 24) முதல் நான்கு நாள்களுக்கு நகைக் கடைகள் மூடப்படுகின்றன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாமக்கல் நகரில் வியாழக்கிழமை (செப். 24) முதல் நான்கு நாள்களுக்கு நகைக் கடைகள் மூடப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வியாபார நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் பலா் பாதிக்கப்படுகின்றனா்.

இதில், நகைக்கடை உரிமையாளா்கள், அங்கு பணியாற்றும் பெண்களும் கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையிலும், தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவ்வாறான சூழ்நிலையில் நகைக் கடைக்கு வரும் வாடிக்கையாளா் நலன் கருதியும், ஊழியா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் நாமக்கல் நகரப் பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைக்கடைகள் வியாழக்கிழமை முதல் 27-ஆம் தேதி வரை மூடப்படுவதாக நகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com