பிலிக்கல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்குள்பட்ட சேளூா் ஊராட்சியில் வடுகபாளையம்புதூரில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பிலிக்கல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்கடாசலம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, கபிலா்மலை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா் நகரும் நியாயவிலைக் கடை திறந்து வைத்தனா். இந் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா்கள், சேளூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரோகிணி, ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.