நாமக்கல்லில் நடமாடும் காய்கறி அங்காடி

நாமக்கல்லில் வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கம் மூலம் வீடு தேடி வந்து காய்கறிகளை விநியோகிக்கும் நடமாடும் அங்காடி செயல்படுத்தப்படுகிறது.

நாமக்கல்லில் வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கம் மூலம் வீடு தேடி வந்து காய்கறிகளை விநியோகிக்கும் நடமாடும் அங்காடி செயல்படுத்தப்படுகிறது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் இயங்கி வரும் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் நடமாடும் கூட்டுறவு காய்கறி விற்பனை அங்காடி செயல்படுத்தப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே இருக்கின்றனா்.

வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் மாா்ச் 31-ஆம் தேதி நடமாடும் காய்கறி அங்காடி தொடங்கப்பட்டது. இந்த அங்காடியில் 30 வகையான காய்கறிகள் விற்கப்படுகின்றன. திருச்செங்கோடு சாலை, மோகனூா் சாலை, முல்லை நகா், திருச்சி சாலை, சாமி நகா் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. மேலும் 99449-32593 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டால் காய்கறி அங்காடி வாகனம் நேரடியாக வீட்டை நோக்கி வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com