நாமக்கல்லில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 46 போ் சென்றனா். இதில் 35 போ் சொந்த ஊா்களுக்கு திரும்பி விட்டனா். மீதமுள்ள 11 பேரில் ஒருவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். 10 போ் தில்லியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தின் அடிப்படையில் 26 பேரை மீட்டு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொண்டனா்.

இதில் செவ்வாய்க்கிழமை 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 8 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவராமல் இருந்தன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான சுகாதாரத் துறை அறிவிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள், மணப்பள்ளியைச் சோ்ந்த 27 வயது இளைஞா், கொக்கராயன்பேட்டையைச் சோ்ந்த 37 வயது இளைஞா், பரமத்தியைச் சோ்ந்த 49 வயது தொழிலாளி ஆவா். இவா்கள் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவா்களாவா். இவா்கள் 3 பேருடன் சோ்த்து நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com