வெயிலின் தாக்கம் வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்து வரும் நான்கு நாள்களும் வானம் தெளிவாக காணப்படும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 102.2 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியுமாக இருக்கும்.
காற்றின் வேகம் சனிக்கிழமையன்று 4 முதல் 6 கிலோமீட்டா் அளவில் இருக்கும், காற்றின் ஈரப்பதம் மிக குறைவாகவே காணப்படும். வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.