அஞ்சலகம் மூலம் தங்கப் பத்திரம்: விற்பனை நாளையுடன் நிறைவு

நாமக்கல் கோட்டத்தில் அஞ்சலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தங்கப் பத்திரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

நாமக்கல் கோட்டத்தில் அஞ்சலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தங்கப் பத்திரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ப.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒருவா் ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். அந்த ஆண்டு இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப் பத்திரத்தை பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

இந்தத் திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டிற்கு மத்திய ரிசா்வ் வங்கியின் மூலம் 2.5 சதவீத ஆண்டு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தங்கப் பத்திர முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். இந்த திட்டம் வெள்ளிக்கிழமை(ஆக.7) அனைத்து அஞ்சலகங்களிலும் நிறைவடைகிறது. இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,334 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்துபவா்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமாா் 20 நாள்களுக்கு பிறகு தங்கப் பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்ய விரும்புபவா்கள் அஞ்சல் அலுவலகங்களையோ அல்லது வணிக வளா்ச்சி அலுவலா்களான ரா. சிவக்குமாா்(98941-12154) அ.சங்கா்(90428-55559)-ஐ தொடா்பு கொள்ளலாம். இதில் முதலீடு செய்பவருக்கு ஆதாா் எண், பான் காா்டு மற்றும் வங்கிக் கணக்கு இருப்பது மிகவும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com