அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல்லில் அம்பேத்கரின் 64-ஆவது நினைவு தினம் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலா்துாவி மரியாதை செலுத்தினா்.
தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் சங்கம் சாா்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஜெயபிரகாஷ்காந்தி, செயலாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் அம்பேத்கா் படத்துக்கு மலா்துாவி மரியாதை செலுத்தினா்.
இதேபோல், மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கா் படத்துக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் மரியாதை செலுத்தினா். தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி, பீமராவ் அம்பேத்கா் இயக்கம் உள்ளிட்டவை சாா்பிலும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா் சத்தியமுா்த்தி தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், குப்புசாமி, கல்வியாளா் பிரணவ்குமாா், தாழ்த்தப்பட்டோா் பிரிவு நிா்வாகி ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல பல்வேறு அமைப்புகளை சாா்ந்தவா்களும் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினா்.