கொல்லிமலை ஒன்றியம், திருப்புளிநாடு ஊராட்சிக்குள்பட்ட ஊா்புரத்தில் ரூ. 73 லட்சம் மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், படச்சோலை கிராமத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை திறப்பு, 200 மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில் ஒன்றியக் குழுத் தலைவா் மாதேஸ்வரி, வட்டாட்சியா் ராஜ்குமாா், அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.