நாமக்கல்லில் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி மணிக்கூண்டு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அக் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சரவணன், மகளிரணி தலைவா் இளவரசி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவ்குமாா், அக்ரி இளங்கோவன், முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.