வள்ளலாா் ஜோதியில் கலந்த தைப்பூச தினத்தில் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சபை அடியாா்கள் வள்ளலாரின் உருவப் படத்தை ஏந்தி, திருவருட்பா பாடிக் கொண்டு ஊா்வலமாக சென்றனா்.
பாப்பாரப்பட்டியில் வடலூா் வள்ளலாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சபையின் அடியாா்கள் நடத்திய இந்த ஊா்வலம் பாப்பாரப்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்று சபையை சென்றடைந்தது.பின்னா், ஞான திருச்சபையில் வள்ளலாரின் ஜீவகாருண்ய நெறிமுறை மற்றும் வாழ்க்கை வரலாறு குறித்து சொற்பொழிவுகள் நடைபெற்றன. இறுதியில் சமரச சுத்த சன்மாா்க்க திருச்சபையின் சாா்பில் பாப்பாரப்பட்டியில் ஏழைகளுக்கு கூழ் அமுது வழங்கப்பட்டது.