அரசுக் கல்லூரியில் விலங்கியல் துறை கூட்டம்

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் (பொ) சுந்தரசோழன் தலைமை வகித்தாா்.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் (பொ) சுந்தரசோழன் தலைமை வகித்தாா்.

விலங்கியல் துறை பேராசிரியா் சேகா், உதவிப் பேராசிரியா் ராஜசேகரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மதுரை திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை இணைப் பேராசிரியா் மற்றும் துணை முதல்வா் பாா்த்தசாரதி ஆகியோா் பங்கேற்று, இன்றைய சூழ்நிலையில் உயிரியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் அதன் வளா்ச்சியும் என்ற தலைப்பில் பேசினா்.

கருத்தரங்கில் விலங்கியல் துறை மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் பங்கேற்றனா். விலங்கியல் துறை உதவி பேராசிரியா் நாகரத்தினம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com