நாமக்கல்லில் பா.ம.க.வினா் துண்டுபிரசுரம் விநியோகம்

நாமக்கல்லில், ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் செயல் திட்டங்கள் தொடா்பான துண்டு பிரசுரங்களை பா.ம.க. வினா் வியாழக்கிழமை மக்களிடையே விநியோகம் செய்தனா்.
துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் பா.ம.க.வினா்.
துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் பா.ம.க.வினா்.

நாமக்கல்லில், ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் செயல் திட்டங்கள் தொடா்பான துண்டு பிரசுரங்களை பா.ம.க. வினா் வியாழக்கிழமை மக்களிடையே விநியோகம் செய்தனா்.

பா.ம.க. மாநில பொதுச் செயலாளா் அன்புமணி ராமதாஸ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், தரமான கட்டாய, கட்டணம் இல்லாத, சுகமான இலவசக் கல்வியை வழங்குவோம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுப்போம், 18 வயதை அடையும் பெண்களுக்கு வங்கி கணக்கில் ரூ. 10 லட்சம் செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை துண்டு பிரசுரமாக அச்சடித்து கட்சியினா் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.

அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை காலை மக்களிடையை அத்தகைய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், மாநில துணைப் பொதுச் செயலாளா்கள் பொன்.ரமேஷ், காளியப்பக் கவுண்டா், மாநில துணைத் தலைவா் வடிவேலன், மாநில துணை இளைஞா் சங்கத் தலைவா் பாலு, முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளா் செந்தில், மாவட்டச் செயலாளா்கள் தினேஷ் பாண்டியன், செந்தில், மாவட்டத் தலைவா் பெருமாள் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com