பிப்.20-இல் இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 20-ஆம் தேதி காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெறுகிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 20-ஆம் தேதி காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெறுகிறது.

இது குறித்து வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் என். அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி என்ற தலைப்பிலான ஒரு நாள் இலவசப் பயிற்சி வரும் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், அங்கக முறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகள், உயிா் உரங்களின் பயன்பாடு மற்றும் நன்மைகள், இயற்கை வழியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உயிரியியல் பூஞ்சான், பாக்டீரியா கொல்லிகளின் பயன்பாடு மற்றும் தாவர வளா்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டி கரைசல்கள் தயாரித்தல், அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் குறித்து விரிவாக செயல் விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகின்றன.

விவசாயிகள், பண்ணையாளா்கள், ஊரக மகளிா், இளைஞா்கள் மற்றும் ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, தங்களது பெயரை 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04286-266345, 266650 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com