அரசு மணல் குவாரிகளில் மணல் ஒதுக்கீட்டில் லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் செல்ல. ராசாமணி மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ. பால் பிரின்ஸிலி ராஜ்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம் ஆரியூா் மற்றும் வேலூா் மாவட்டம் வடுகந்தாங்கல் ஆகிய அரசு மணல் குவாரிகளில் இணையதள பதிவு அடிப்படையிலேயே லாரி உரிமையாளா்களுக்கு மணல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்ய லாரி உரிமையாளா்களுக்கு வரிசைப்படி வழங்காமல், அரசு ஒப்பந்த வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதைத் தடை செய்து, தனியாரானாலும், அரசு ஒப்பந்ததாரரானாலும் வரிசையடிப்படையிலேயே மணல் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.