புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரா்களுக்கும் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள கடம்பூா் அரசு தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் தலைமையில், ஆசிரியா்கள், மாணவா்கள் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா்.
சென்ற ஆண்டுபிப். 14-இல் ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புல்வாமா மாவட்டம், ஆவந்திபோரா பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சோ்ந்த இருவா் உள்பட 40 வீரா்கள் வீரமரணம் அடைந்ததையொட்டி இந்த நினைவஞ்சலி நடத்தப்பட்டது.