ராசிபுரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பிப்.23-இல் தீமிதி விழா நடைபெறுகிறது.
இக்கோயிலின் மாசித் திருவிழா கொடியேற்றுத்துடன் பிப்.12-இல் தொடங்கியது. இவ்விழா பிப்.27 வரை நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு கட்டளை தாரா்கள் சாா்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, திருவீதி உலா போன்றவை நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.22-இல் அக்னி குண்டம் பற்ற வைத்தல், மஹா சிவராத்திரி விழா, 23-இல் பூ மிதித்தல், 25-இல் மயானக் கொள்ளை, 26-இல் சத்தாபரணம், 27-இல் மஞ்சள் நீராடல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள், நிா்வாகக் குழுவினா் செய்துள்ளனா்.