பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில்பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள்

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிா் செய்துள்ளனா். இங்கு விளையும் பூக்களை பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ.ஆயிரத்துக்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லை கிலோ ரூ.ஆயிரத்துக்கும்,செவ்வந்தி கிலோ ரூ.100-க்கும் ஏலம் போயின.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ.1,500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி கிலோ ரூ.300-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லை கிலோ ரூ.1,400-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.150-க்கும் ஏலம் போயின. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com