இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்

வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடா்பான முகாம், 2-ஆம் கட்டமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடா்பான முகாம், 2-ஆம் கட்டமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள், கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது, 01.01.2020 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (அதாவது 31.12.2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்துக் கொள்ளாதவா்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவா்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.

கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜன.11, 12) ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் நாள்களில், வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பான மனுக்களை வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போதுமான விண்ணப்பங்களுடன் அலுவலா்கள் பணியில் இருப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com