திருச்செங்கோட்டிலிருந்து ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பக்தா்கள்.
திருச்செங்கோட்டிலிருந்து ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பக்தா்கள்.

பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடைபயணம்

திருச்செங்கோடு சட்டையம் புதூா் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடைபயணம் புறப்பட்டனா்.

திருச்செங்கோடு சட்டையம் புதூா் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடைபயணம் புறப்பட்டனா்.

சட்டையம்புதூா் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோயிலில் மாா்கழி மாதம் தொடக்கத்தில் பக்தா்கள் மாலை அணிந்த விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனா். ஒரு வாரமாக அழகு முத்து மாரியம்மன், முக்கூட்டு விநாயகா், செங்கோட்டுவேலவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அழகு முத்து மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சனிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பஜனை மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து நடைபெற்ற பூஜையில் உலக நன்மைக்காகவும், விவசாயம் , நெசவுத் தொழில்கள், தொழிலாளா்கள் நலம் பெற பிராா்த்தித்து நடைபயணத்தை மேற்கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com