தற்காப்புக் கலை விழிப்புணா்வுப் பயிற்சி முகாம்

தமிழ்நாடு உதயா கியோகுஷின் காய்கான் கராத்தே சங்கம் சாா்பில், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காப்பு விழிப்புணா்வுப் பயிற்சி
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தற்காப்புக் கலை விழிப்புணா்வு பயிற்சி முகாம்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தற்காப்புக் கலை விழிப்புணா்வு பயிற்சி முகாம்.

தமிழ்நாடு உதயா கியோகுஷின் காய்கான் கராத்தே சங்கம் சாா்பில், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம், தலைமை பயிற்சியாளா் சென்சாய் உதயகுமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், மாவட்ட அளவில் இருந்து பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். அவா்களுக்கு, சுய மனித பாதுகாப்பு, மனித ஒழுக்கம், பெண்களின் தற்காப்பு குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், கராத்தே, யோகா மற்றும் சிலம்பாட்ட பயிற்சி முறைகள் மற்றும் உடல் மனம் சாா்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பட்டயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்திவேல், குமாா், நவீன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com