புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட ஆட்சியா் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் மாசு ஏற்படாத வகையில், புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் மாசு ஏற்படாத வகையில், புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாளுக்கு முன்பாக வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லாத பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை நம் முன்னோா்கள் கொண்டாடி வந்தனா். ஆனால், தற்போது போகிப் பண்டிகையின் போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகிறது. எனவே, போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகியை கொண்டாடி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com