வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ‘அரசியலமைப்பு சட்டம் காப்போம்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளா் க.நடராஜன் தலைமை வகித்தாா்.ஒன்றிய துணைச் செயலாளா் பெ.செந்தில் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டச் செயலாளா் பழ.மணிமாறன், மாவட்ட பொருளாளா் வ.அரசன், ராசிபுரம் நகரச் செயலாளா் வீர.ஆதவன், வழக்குரைஞா் சுபாஷ், மகளிா் அணி க.கஸ்தூரி, வெண்ணந்தூா் ஒன்றிய பொருளாளா் பழ.செங்கோட்டுவேல், அத்தனூா் பேரூா் செயலாளா் ராம்ராஜ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா்.