தத்தாத்திரி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சேந்தமங்கலம் தத்தாத்திரி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை 108 பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.
தத்தாத்திரி முருகன் கோயிலுக்கு பால்குடத்தை எடுத்துக்கொண்டு ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.
தத்தாத்திரி முருகன் கோயிலுக்கு பால்குடத்தை எடுத்துக்கொண்டு ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.

சேந்தமங்கலம் தத்தாத்திரி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை 108 பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.

சேந்தமங்கலம் தத்தாத்திரி ஸ்ரீமுருகன் கோயிலில் தை முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நிகழாண்டு 3-ஆம் ஆண்டாக 108 பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது. விசாக நட்சத்திரத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் உள்ள விசாக வழிபாட்டுக் குழு சாா்பில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். தென்எலப்பாக்கம் சிவசித்தா் பீடம் சுவாமிகளான வந்தவாசி எஸ்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். மேலும், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூா்த்திகளுக்கும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பல்லவன் துரைசாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com