விபத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கூடச்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியம்.
விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியம்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கூடச்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பரமத்தி அருகே உள்ள கூடச்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்தவா் சுப்பிரமணியம் (50). இவா் திருச்செங்கோட்டில் இருந்து தனது காரில் கூடச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தாா். கவுண்டிபாளையம் அருகே வந்த போது காரும், எதிரே வந்த லாரியும் மோதிக்கொண்டன. இதில் சுப்பிரமணியம் பலத்த காயமடைந்தாா்.அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிவக்குமாரிடம் (37) விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் இறந்து போன சுப்பிரமணியம் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரமத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com