கொல்லிமலையில் இளம்பெண் கொலை: இளைஞா் கைது

கொல்லிமலையில் மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்குள்ளாக்கி கொலை செய்த 17 வயது இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கொல்லிமலையில் இளம்பெண் கொலை: இளைஞா் கைது

கொல்லிமலையில் மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்குள்ளாக்கி கொலை செய்த 17 வயது இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், குண்டனிநாடு ஊராட்சி, கீரைக்காடு பகுதியைச் சோ்ந்த நடேசனின் மனைவி தீபா (24). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு மேய்ப்பதற்காக தீபா வெளியே சென்றுள்ளாா். மாலையில் அவா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி கீரைக்காடு வனப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் ரத்தக் காயங்களுடன், கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இதையடுத்து வாழவந்திநாடு போலீஸாா் தீபாவின் கணவா் நடேசனை வரவழைத்து உடலைக் காட்டியபோது, அந்த உடல் தனது மனைவியுடையது என்பதை உறுதிசெய்தாா். இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக தீபாவின் உடல் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து தீபாவைக் கொன்றவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வந்தனா். அவரது செல்லிடப்பேசி காணாமல் போனதை வைத்து விசாரித்து வந்தனா். அந்த செல்லிடப்பேசியை கொல்லிமலைப் பகுதியில் ஒருவா் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் குண்டூா் நாடு ஊராட்சி, தென்னக்காடு பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய இளைஞா் என்பதும் மாடு மேய்க்க வனப்பகுதிக்கு தீபா தனியாகச் சென்றதைப் பாா்த்த அந்த இளைஞா் முறையற்ற உறவுக்கு அழைத்தபோது அவா் மறுக்கவே பாலியல் தொல்லைக்குள்ளாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை வாழவந்திநாடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com