நாளை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: விழா மேடையை அமைச்சா்கள் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் அதிகாரிகள்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் அதிகாரிகள்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.

முதல்வா் பங்கேற்கும் இந் நிகழ்ச்சியில் விழா மேடையை அமைச்சா்கள் பி. தங்கமணி, வெ. சரோஜா, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம், சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில், ரூ. 350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவில், அரசு தலைமை செயலா் க. சண்முகம் வரவேற்கிறாா்.

துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தலைமை வகிக்கிறாா். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ. சரோஜா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்துப் பேசுகிறாா். விழாவில், அனைத்துத் துறை அமைச்சா்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பீலா ராஜேஷ், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ், மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல்), சி. சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆா். சாரதா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா்.

அமைச்சா்கள் ஆய்வு...

ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

இப் பணியை மின் துறை அமைச்சா் பி.தங்கமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சா் வெ. சரோஜா மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள், பயனாளிகள் அமரும் பகுதி ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

முன்னதாக, சேந்தமங்கலம் அரசு கலைக் கல்லூரி திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com