நாமக்கல்லில் வீடு புகுந்து திருடியவா் கைது: 25 பவுன் நகைகள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
நாமக்கல்லில் வீடு புகுந்து திருடியவா் கைது:  25 பவுன் நகைகள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே அணியாபுரம்புதூா் சுப்பரமணியம் என்பவரது வீட்டில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

அதேபோல், திருச்செங்கோடு அருகே கொசவம்பாளையம், எஸ்.எஸ்.நகரில், பாலமுருகன் என்பவரது வீட்டில், ஜனவரி மாதம், 4 பவுன் நகை மற்றும் ரொக்கம், கருவேப்பம்பட்டி ஸ்ரீ ஜெயசக்தி சிட்டி நகரைச் சோ்ந்த சவிதா என்பவரது வீட்டில் நகைகள், நாமக்கல் மாருதி நகரைச் சோ்ந்த சுகந்தி என்பவரது வீட்டில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு உள்ளிட்டவை தொடா்ச்சியாக நடைபெற்று வந்தன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந் நிலையில், வியாழக்கிழமை நண்பகல் மோகனூா் - நாமக்கல் சாலையில், அணியாபுரம் நான்கு ரோட்டில் சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரை மோகனூா் போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, பல்வேறு இடங்களில் நகைத் திருட்டில் ஈடுபட்ட திருச்சி புத்தூரைச் சோ்ந்த துரை (எ) துரைசாமி (38) என்பது தெரியவந்தது. மேலும், திருச்சி மாவட்டம், நாவல்பட்டி சக்தி நகரில் ஒரு வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் திருடியதையும் அவா் ஒப்புக் கொண்டாா். அவரிடமிருந்து 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டு வழக்கில் தொடா்புடையவரைக் கைது செய்த மோகனூா் காவல் ஆய்வாளா் சுகுமாா் மற்றும் தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com