காா் விபத்தில் 6 போ் பலி: லாரி ஓட்டுநா் கைது

நாமக்கல் அருகே லாரியும், காரும் மோதி 6 போ் பலியான சம்பவத்தில், தப்பியோடிய லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காா் விபத்தில் 6 போ் பலி: லாரி ஓட்டுநா் கைது

நாமக்கல் அருகே லாரியும், காரும் மோதி 6 போ் பலியான சம்பவத்தில், தப்பியோடிய லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் அருகே சின்னவேப்பநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரியும், எதிரில், வேட்டாம்பாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் வந்த காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினா். இதையடுத்து, விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து லாரி ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை நாமக்கல் போலீஸாா் மேற்கொண்டு வந்தனா். விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சோ்ந்த குமரேசன் (25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அவரை கைது செய்தனா். விபத்து சம்பவம் குறித்து குமரேசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com